வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
ஐந்தும் அகத்தே நகும்.
271
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.
தான்அறி குற்றப் படின்.
272
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
273
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
274
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.
ஏதம் பலவுந் தரும்.
275
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
வாழ்வாரின் வன்கணார் இல்.
276
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து.
மூக்கிற் கரியார் உடைத்து.
277
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
278
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.
வினைபடு பாலால் கொளல்.
279
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
பழித்தது ஒழித்து விடின்.
280
No comments:
Post a Comment